Saturday, April 24, 2010

மழையின் சங்கீதம்












பிரியமானவளே


சில்லென்ற சாரலுடன் மழை
சிறு தவளைகளின் ரீங்காரம்...

விளக்கோடு விளையாடும்
விட்டில் பூச்சிகள்.............

மேகக் கூட்டங்களின் சங்கீதத்திற்கு
இடியும் மின்னலும் இசை மீட்டுகின்றன...

என் பிரியமானவளைத் தாலாட்டப்
பிறக்கின்றன மழையின் குழந்தைகள்....

ஒற்றைக் குடையில் நான் மட்டும் போகும் போது
வீதியோரத்து மின்விளக்கெல்லாம் கண்ணடித்து கதை சொல்லும்...

காத்திருந்த நாட்கள் கடந்து
காதலியுடன் வாழும் நாட்கள் வரும் என...

காத்திருக்கிறேன் நானும் மழையின் சங்கீதத்தை கேட்டபடி
பிரியமானவளுடன் வாழும் நாட்களை எண்ணி...

No comments:

Post a Comment