Tuesday, September 1, 2009

காதலின் வலியைச் சுமந்து...





என்னவளே
இருகரங்களுக்கிடையில் துடிக்கும்
மிருதங்கம் போல உன் சொற்களால்_என்
சின்ன இதயம் சிதறுண்டு போகுதடி

ஊனாய் உருக்கி என்
உள்ளத்தில் வைத்தேன் உன்னை_இன்று
ஊணுறக்கம் வெறுத்தேன் அன்பே
உன்னையே நினைத்தேன் உயிராய்

என் உயிர் உருகும் ஓசை ஏனோ
உனக்கு கேட்கலையே என்னுயிரே
ஏற்றி வைத்த தீபம் எரிந்து ஒளி கொடுக்கும்
என் காதல் தீபம் தன்னை அழித்து வாழ்வு கொடுக்கும்

இருவர் விழிகளும் சந்திக்கும் முன்னரே
என் கண்களுக்கு கண்ணீர் தான் பரிசு
இதயவீணையின் நரம்புகள் கூட
சுருதி மாறி இசை மீட்டுகிறது உன்னாலே

அழகாய்ச் சிரித்த நிலவு கூட
அனலாய்க் கொதிக்கிறது
அமைதியாய் இருந்த அலைகடல் கூட
ஆர்ப்பரிக்கிறது புயல்காற்றாய்

காதல் காயத்தை உண்டாக்கியவள்
காயத்திற்கு மருந்திடாமல் போன மாயமென்ன
உனக்கே உனக்காய் உயிர்வாழ
உலகத்தில் ஒரு ஜீவன் உண்டு அறிவாயோ கண்ணே

வெண்ணிலை பிடித்து முத்தமிடும் வயதில்
பெண்ணிலவாய் நீ வந்தால்
என் இனிய வாழ்வில் என்றும்
வசந்தம் வீசும் அன்பே


2 comments:

  1. காதல் காயத்தை உண்டாக்கியவள்
    காயத்திற்கு மருந்திடாமல் போன மாயமென்ன
    உனக்கே உனக்காய் உயிர்வாழ
    உலகத்தில் ஒரு ஜீவன் உண்டு அறிவாயோ கண்ணே

    பெண்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் வாருவாள் என காத்திரு .....மனம் மாறி வருவாள் வசந்தம் வீசும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி அக்கா.
    எப்பவுமே கருத்து எழுதுறிங்க..
    காத்திருப்பது கூட காதலில் சுகம் தான்

    ReplyDelete