Wednesday, August 26, 2009

புலிப் போராளி ஒருவருக்கும்,ஜனநாயகவாதி எனக் காட்டிக்கொள்ளும் பத்தி எழுத்தாளர் ஒருவருக்கும் இடையிலான ஒரு கற்பனைப் பேட்டி.


ஒட்டுமொத்த புலிகள் சார்பாக இறுதிக் களத்திலிருந்து தப்பி வந்த போராளிக்கும், ஜனநாயகவாதிகள்,கல்விமான்கள்,ந
டுநிலைவாதிகள் என கூறுவோர்,
புலிஎதிர்ப்பாளர்கள் அனைவர் சார்பாகவும் பத்தி எழுத்தாளருக்குமிடையிலான கற்பனை பேட்டி.

எழுத்தாளர்_ இன்றைய இந்தஅவலநிலைக்கு புலிகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

போராளி_ ஆம்.
புலிகள் செய்த மிகப்பெரிய தவறு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும்,நின்மதியாகவும் வாழவேண்டும் என்பதற்காய் எமது ஆசாபாசங்களைத் துறந்து இரவுபகல் பாராது காடுமேடெல்லாம்
நித்திரை கொள்ளாது கண்விழித்து காவலரணில் இருந்து எதிரி எம் நிலத்தை ஆக்கிரமிக்க கூடாது என்பதற்காயும் நீங்கள் நின்மதியாக நித்திரை கொள்ள வேணும் என்பதற்காய் நாம்
நித்திரை கூடக்கொள்ளாது உயிரை விட்டது தப்புதான். கடலில் மீன் பிடிக்கச்செல்லும் போது சிங்கள படையால் கொல்லப்படும் போது உங்களுக்கு காவலாயும்,அன்னை மண்ணை அந்நியன்
ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காய் தரையிலும் சண்டையிட்டும் சகலவழியிலும் தடையாய் இருந்த எதிரியை கரும்புலியாயும் வெடித்து பெத்த தாய்க்கே யாரென தெரியாத ஆக்களாய் போராடியது
தான் நாம் செய்த தவறு.

பெற்ற பிள்ளை கண்ணைக் குத்துது என்பதற்காய் எந்தத் தாயும் பிள்ளையை வெறுப்பதில்லை அதைப்போல எத்தனை துரோகங்களை எமக்கெதிராகச் செய்த போதும்
அத்தனை பேருமே எம் தமிழுறவுகளே என்று உங்கள் அனைவருக்காகவும் போராடியது தான் தவறு.

எழுத்தாளர்_ அப்படியென்றால் புலிகள் தவறு செய்யவில்லை என்கிறீர்களா?

போராளி_ இல்லை அப்படி நான் சொல்லவரவில்லை, வரலாற்றை எடுத்துப்பார்த்தால் மகாபாரதத்தில் கூட கொடைவள்ளல் கர்ணனை கொல்லவேண்டிய நிலையிலும் சரி,போர்க்களத்தில் பீஷ்மர்,துரோணர்
போன்றவர்களையும் அருச்சுனன் கொல்லவேண்டி வந்த போது அருச்சுனன் மனம் தளர்ந்து கிருஷ்ணரிடம் என்னால் அவர்களை எதிர்த்து போரிட முடியாது அங்கே நிற்பவர்கள் எனது குரு,
எனது உறவினர்கள்,நண்பர்கள் என்று சொன்ன போது கிருஷ்ணர் சொன்னது இதுதான். தர்மத்தைக் காக்க வேண்டும் எனில் சில சமயம் இப்படியான நல்லவர்களையும் கொல்ல வேண்டும் என்பதுதான்.
அதேபோல எம் மக்களின் விடிவிற்காயும்,சுதந்திர தமிழீழத்திற்காயும் அப்படியான சிலவற்றைச் செய்ய வேண்டி வந்தது அதற்கான சந்தர்ப்பங்களையும் அவர்களே உருவாக்கி விட்டார்கள்.
இது அவர்களின் துர்ப்பாக்கியமே.

எழுத்தாளர்_ ஈழப்போரின் இறுதி நாட்கள் குறித்தும்,முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் புலிகளின் தவறான முடிவுகள் தான் காரணம் என்கிறார்களே இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

போராளி_ ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிங்கள பேரினவாத படைகளால் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர்.
இறுதி ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்களுக்கு மேலும் காயப்பட்ட மக்களும் புல்டோசரால் ஏற்றியும் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டு
மண்ணோடு மண்ணாக மக்கி போய்விட்டார்கள். அதை விட புலிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள் என்பதெல்லாம் வெறும்
புனைகதைகளே. மக்களை புலிகளிடம் இருந்து பிரிக்கவும் புலிகள் மீதான நல்லெண்ணத்தை சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பிரச்சாரமே.

மக்கள் விரும்பியே எம்மோடு வந்தனர். புலிகள் அவர்களை வற்புறுத்தவில்லை, இறுதிக்காலங்களில் புலிகள் மக்களை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு
செல்லச் சொல்லியும் மக்கள் இறுதிவரை எம்முடனேயே இருந்தனர். தவிர புலிகளினதும்,பிரபாகரனினதும் தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனென்றால் மக்களுக்கான போக்குவரத்து பாதைகள் சகலதும் மூடப்பட்டு மிகப்பெரிய பொருளாதாரத்தடை எம் மக்கள் மீது விதிக்கப்பட்டு ஒருநேர
உணவு கூட இன்றி அடம்பன் கொடியைத் தின்று எம் மக்கள் இருக்கும் போது அவர்களை காக்க வேண்டியதே எம்முன் இருந்த மிகப்பெரிய தேவையாக
இருந்தது. அதனால் எம்மால் முடிந்த அத்தனை வழிகளிலும் மக்களை காத்தோம். காயமடைந்த மக்களுக்கெல்லாம் எமது மருத்துவப்போராளிகள் இடைவிடாது
சேவை செய்தனர். எம்மால் முடிந்தளவு கையிருபில் இருந்த பொருட்களைக் கொண்டு கஞ்சியாவது காச்சிக் கொடுத்தோம்.

மக்களுக்காக போராட்டமே தவிர புலிகளின் இருப்புக்காக போராட்டமல்ல அதனால் நாம் இறுதிக் கட்டத்தில் சில முக்கியமான முடிவுகளை
எடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். மற்றும் படி நீங்கள் எல்லாரும் புலிகள் மீது சொல்லும் அவதூறுகளைப் போல புலிகள் என்றும் நடந்ததில்லை.
புலிகளும்,பிரபாகரனும் செய்த மிகப் பெரிய தவறு தமிழர்களை நம்பி போராட்டத்தை தொடங்கி இறுதிவரை போராடி வீரச்சாவடைந்தது தான்.
ஒவ்வொரு போராளியும் தன் மூச்சுள்ளவரை சிந்தித்தது ஒன்றே ஒன்றுதான் எம் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திர ஈழத்தில்
தமிழர் சொந்த பலத்தில் நிற்கவேண்டும் என்பது தான். இந்த அவலம் எம்மோடு முடிந்து போகட்டும் இனிவரும் எம் சந்ததியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்க
வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் ஆயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரை ஈந்தார்கள். ஒவ்வொரு போராளிக்கு பின்னும்
ஒவ்வொரு கதைகள். தொலைந்தது மனிதம் மட்டுமல்ல ஒவ்வொருத்தரின் வரலாறும் தான்.

எழுத்தாளர்_ ஈழத்தில் இனி ஓர் ஆயுதப் போர் சாத்தியமாகுமா?

போராளி_ போராட்டத்தை தீர்மானிப்பது நாமல்ல எதிரி தான். ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் இனி எந்த வழியில்
போராட்டம் சாத்தியமாகும் என்பதை விட தமிழர்கள் முதலில் ஒற்றுமையாக வேண்டும் இல்லையெனில் ஆயுதப்போராட்டமல்ல அகிம்சைப்
போராட்டம் கூட சாத்தியமாகாது. அதற்கு முதலில் தமிழர்கள் தமது பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எதிர்காலச் செயற்பாடுகளுக்காகத்
தம்மைத்தாமே தயார்ப்படுத்த வேண்டும். அதுவே இன்றுள்ள அவசரத்தேவை.

உங்களைப் போன்ற ஜனநாயகவாதிகளாலும்,சில கல்விமான்களாலும்,தமிழ்த்தேச�
��ய எதிர்ப்பாளர்களாலும் இப்படியான கேள்விகளும்,
தேவையற்ற ஆய்வுகளும் தான் செய்ய முடியுமே தவிர உருப்படியாக எதுவுமே செய்ய முடியாது. முடிந்தால் முட்கம்பி வேலிகளுக்கு பின் சிறை
பட்டிருக்கும் மூன்று லட்சத்துக்கு மேலான மக்களை விடுவித்து சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்துவிட்டு புலிகள் மீது குற்றம் சொல்லுங்கள்
யாரையும் சுட்டிக்காட்டுமுன் மூன்று விரல் உங்களைத்தான் சுட்டுது என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களைப் போன்றவர்களாலும்,உங்கள் தலைவர்களாலும் சிங்கள்வனின் கு*** கழுவலாம்,காட்டிக்கொடுக்கலாம், ஏன் தும்பினியின்
இடுப்பிலை தமிழீழத்தைக் காட்டலாம் ஆனால் எதுவுமே என்றைக்கும் செய்ய முடியாது. முடிந்தால் செய்து விட்டு புலிகள் மீது குறை சொல்லுங்கள்.
நீங்களும் படுக்க மாட்டீர்கள் படுக்கிறவனையும் விடமாட்டீர்கள் எனில் இது யார் குற்றம்?

No comments:

Post a Comment