Friday, October 8, 2010

ஒற்றை மரம்..



அந்த ஒற்றை மரம்
பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று
பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது
கூடுகட்டிக் குருவிகள் வசித்தது
மரம் முழுக்க மந்திகள் இருந்தது
மரங்கொத்தி பறவையும் மறைப்பில்
குருவிச்சை கூட குசியாய் இருந்தது
எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது
உண்ணக் கனி கொடுத்தது
உறங்கப் பாய் கொடுத்தது
ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது
ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து
கொலை செய்யவும் துணிந்தது
கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்
இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று
எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌
காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை
தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு
காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்
உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு
காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி
பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது
மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு
ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது
அதிலும் குளிர்காயச் சிலர்
அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்

jeeva.
03.10.10

3 comments:

  1. Azhagana Kavizharukku en vazhthukal

    ReplyDelete
  2. நன்றி . அழகான் அர்த்த முள்ள கதை ..
    மரங்கள் துளிர்க்கும் துளிர் காலம் வரும்போது.

    ReplyDelete